செல்போன் திருடியதாகக் கூறி அடித்து புதைக்கப்பட்ட துறவி உடல்

0 488

வேலூர் மாவட்டம் வள்ளிமலையில் செல்போன் திருடிவிட்டதாகக் கூறி அடித்துக் கொன்று புதைக்கப்பட்ட துறவி ஒருவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனை நடைபெற்றது.

62 வயதான ரவி என்ற அந்த முதியவர், வள்ளிமலை கோயில் அருகே பட்டா நிலத்தில் குடிசை அமைத்து, கூலி வேலை செய்து வந்தார்.

அந்த நிலத்தின் பக்கத்து நிலத்துக்காரரான ஹரி என்பவர், தனது 10 ஆயிரம் ரூபாய் செல்போனை ரவி திருடிவிட்டதாகக் கூறி, அவரை கண்மூடித்தனமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் ரவி உயிரிழந்த நிலையில், உடலை பள்ளம் தோண்டி புதைத்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதலங்களில் சிலர் பதிவிட்ட நிலையில், போலீசார் ஹரியை கைது செய்துள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments