16 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்ட இளைஞர் கைது... திருமணத்தை நடத்திவைத்த பெற்றோருக்கு வலைவீச்சு...

0 605

மயிலாடுதுறையில், 16 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்ட இளைஞரை கைது செய்த போலீசார், திருமணத்தை நடத்தி வைத்த சிறுமியின் பெற்றோரையும், இளைஞரின் பெற்றோரையும் தேடிவருகின்றனர்.

உதயகுமார் என்ற கல்லூரி மாணவரை அந்த சிறுமி காதலித்துவந்ததால் சிறுமியின் பெற்றோர் அவரை ரஞ்சித் என்ற இளைஞருக்கு திருமணம் செய்துவைத்ததாக சொல்லப்படுகிறது.

திருமணம் முடிந்து 2 வாரங்களே ஆன நிலையில், சிறுமி அழைத்ததன் பேரில் உதயகுமார் நள்ளிரவில் வீட்டிற்குவந்து சிறுமியை அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்குச் சென்றதாக கூறப்படுகிறது.

சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த தகவலின் பேரில் சிறுமியை திருமணம் செய்துகொண்ட ரஞ்சித்தையும், ஆண் நண்பரான உதயகுமாரையும் போலீசார் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments