பேருந்தில் ஏற முயன்ற கர்ப்பிணியை அலைக்கழித்த அரசுப் பேருந்து ஓட்டுநர் சஸ்பென்ட்

0 503

திண்டுக்கல் மாவட்டம் சிங்கிலிக்காம்பட்டியில் பேருந்தில் ஏற முயன்ற 5 மாத கர்ப்பிணியை அலைக்கழித்ததாக அரசுப் பேருந்து ஓட்டுநர் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.

பவித்ரா என்ற அந்த பெண் 12-ஆம் தேதி இரவு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த போது, அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தை நிறுத்த கை காட்டியதாக தெரிகிறது.

சிறிது தூரம் தள்ளி நிறுத்திய ஓட்டுநர் காசிராஜன், அந்தப் பெண் பேருந்தில் ஏற முயன்ற போது பேருந்தை சட்டென்று நகர்த்தி, 10 அடிக்கு அப்பால் நிறுத்தியதாக கூறப்படுகிறது. இது பற்றி பவித்ரா கூறிய தகவலின் பேரில் அப்பகுதி மக்கள் பேருந்தை சிறை பிடித்து போராட்டம் நடத்திய நிலையில் ஓட்டுநர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments