அஞ்சலகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் முதலீடு செய்த ரூ.32 லட்சத்தை மோசடி செய்த அஞ்சல உதவியாளர் கைது

0 375

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பூவனூர் கிளை அஞ்சலகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் முதலீடு செய்த 32 லட்ச ரூபாயில் 29 லட்சத்தை கையாடல் செய்ததாக அஞ்சல உதவியாளர் கைது செய்யப்பட்டார்.

நீலமேகம் என்பவர் தமது பெயரிலும், தமது மனைவி பெயரிலும் 2018-ஆம் ஆண்டு இரு தவணைகளாக காசோலை மூலம் அந்தத் தொகையை டெபாசிட் செய்ததாக கூறப்படுகிறது.

நீலமேகத்துக்கு சந்தேகம் வராமல் இருக்க பாஸ் புத்தகத்தில் பேனாவால் பணம் வரவு வைக்கப்பட்டது போல செந்தில் வேலன் குறித்து தந்ததாகவும், நீலமேகம் இறந்த பின் முதிர்வுத் தொகையை அவரது மனைவி கேட்ட போது மோசடி வெளிச்சத்துக்கு வந்ததாகவும் போலீசார் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments