கூடுதல் வருவாய் ஈட்டும் நடவடிக்கையாக மெட்ரோ வழித்தட தூண்களில் விளம்பரம் செய்ய தனியார் நிறுவனத்துக்கு உரிமம்

0 369

மெட்ரோ ரயில்வே நிறுவனத்துக்கு கூடுதல் வருவாய் ஈட்டும் நடவடிக்கையாக மெட்ரோ ரயில் தூண்களில் விளம்பரம் செய்ய தனியார் நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

அந்நிறுவனம் மீனம்பாக்கம் முதல் ஆலந்தூர் வரையிலும், ஈக்காட்டுத்தாங்கல் முதல் கோயம்பேடு வரையிலும், ஆலந்தூர் முதல் சின்னமலை வரையிலும் உள்ள தூண்களில் விளம்பரம் செய்ய உள்ளது.

புதுவண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் பணிமனை வரையிலான தூண்களில் விளம்பரம் செய்ய விரைவில் ஒப்பந்தம் வழங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments