பக்ரீத்தை முன்னிட்டு தியாகதுருகம் சந்தையில் ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனை

0 442

பக்ரீத்தை முன்னிட்டு கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம் வாரச் சந்தையில் 10 கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

நாமக்கல் வாரச் சந்தையில் 2 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனையான நிலையில், சேலம் மாவட்டம் வீரகனூர் கால்நடை சந்தையில் உரிய விலை கிடைக்காததால் தங்களது ஆடுகளை திரும்ப கொண்டுச் சென்றதாக வியாபாரிகள் கூறினர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் கடந்தாண்டு 6 கோடி ரூபாய் வரையில் விற்பனையான நிலையில் இந்தாண்டு 4 கோடி ரூபாய்க்கு மட்டுமே ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments