கோயிலில் திருட முயன்ற 3 பேரை விரட்டிப் பிடித்த மக்கள்...

0 374

செங்கல்பட்டு அருகே கோயிலில் நள்ளிரவில் திருட முயன்ற 3 பேரை அப்பகுதி மக்களே 3 மணி நேரமாக தேடிக் கண்டுபிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

புலிப்பாக்கம் குன்றின் மீது உள்ள பிடாரியம்மன் கோயில் அருகே இரவில் தூக்கிக் கொண்டிருந்த திருநங்கை ஒருவர், கோயிலில் ஒரு கும்பல் பூட்டை உடைத்துக் கொண்டிருப்பதாக ஊருக்கு தகவல் அளித்தார்.

இதன் பேரில் ஊர் மக்களில் சிலர் திரண்டு அங்கு சென்ற போது, திருட்டு கும்பல் பாறை இடுக்குகளில் பதுங்கிக் கொண்டது.

அவர்களை தேடிப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்த போது, 3 பேரும் மற்றொரு திருட்டு வழக்கில் தேடப்பட்டு வருபவர்கள் என போலீஸார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments