பள்ளிக் கல்வித் துறையின் ஐம்பெரும் விழாவில் முதலமைச்சர் பங்கேற்பு...

0 229

அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள 22 ஆயிரத்து 931 ஸ்மார்ட் வகுப்பறைகளையும், ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் திட்டத்தையும் சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறையின் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர், பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர், 67வது தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments