பாபநாசம் அருகே வீடுகட்ட தோண்டிய பள்ளத்தில் ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

0 469

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே வீடுகட்ட பள்ளம் தோண்டும்போது பண்டைய கால ஐம்பொன் சிலைகள் மற்றும் பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

தேவராயன்பேட்டை சிவன் கோயில் அருகே முஹம்மது பைசல் என்பவரின் நிலத்தில் அம்பாள், சோமநாதர், பிரதோசகர், நாயகி, திருஞானசம்பந்தர் உள்ளிட்ட சிலைகளை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பூஜை பொருட்களான தட்டு, பீடம் சங்கு போன்றவையும் கிடைக்கப் பெற்ற நிலையில், மேலும் பள்ளங்களை தோண்டி சிலைகள் உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments