அரசுப் பேருந்தின் பிரேக் பழுதானதால் லாரி மீது மோதி பள்ளி மாணவ மாணவிகள் உட்பட 25க்கும் மேற்பட்டோர் காயம்

0 437

தருமபுரியில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் பகுதியில் அரசு பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் பள்ளி மாணவ மாணவிகள் உட்பட 25 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

தொப்பூர் வனப் பகுதி சாலையில், சாலை போடும் பணி நடந்து வருவதால், இருவழி சாலையில் ஒரு சாலையில் மட்டும் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

இந்நிலையில், இன்று காலை தருமபுரியில் இருந்து புறப்பட்ட பேருந்து ஆஞ்சநேயர் கோயில் அருகே வந்த போது பிரேக் பழுதானதால் எதிரே வந்த லாரி மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments