இதய பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞர்... நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடியபோது உயிரிழப்பு

0 475

புதுச்சேரி லாஸ்பேட்டை முல்லைநகரை சேர்ந்த கிஷோர் என்ற 25 வயது இளைஞர் இதய பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில்  இன்று காலை தனது நண்பர்களுடன்  கிரிக்கெட் விளையாடி உள்ளார்.

அப்போது பந்தை பிடிக்க வேகமாக  ஓடியதால் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத்  தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments