பரமக்குடி தேசிய நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ரூ.1.38 லட்சம், முக்கிய ஆவணங்களும் பறிமுதல்

0 249

காண்ட்ராக்டர்களிடம் இருந்து லஞ்சம் வாங்கப்படுவதாக வந்த புகார் தொடர்பாக, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.

அலுவலக மேலாளர் சுரேஷ்பாபு உள்ளிட்ட நான்கு பேரிடம் இருந்து கணக்கில் வராத ஒரு லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, பரமக்குடி சேதுபதி நகரில் உள்ள சுரேஷ்பாபுவின் அறையில் இருந்து 3 லட்சத்து இரண்டாயிரத்து 300 ரூபாயும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments