காவல்துறையினர் துரத்திய போது தப்பி ஓடியதில் 3 பேருக்கும் வலது காலில் எலும்பு முறிவு

0 335

கடலூர் மஞ்சக்குப்பத்தில் வீடுகளில் தனியாக இருந்த பெண்களிடம் கத்தியைக் காட்டி கொள்ளையடித்த வழக்கில் தாங்கள் பிடிக்க முயன்ற போது தப்பிச் சென்ற 3 பேர் வழுக்கி விழுந்து காலில் மாவுக்கட்டு போடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த1 மற்றும் 6-ஆம் தேதிகளில் நடந்த கொள்ளையில் தொடர்புடைய 5 பேர் ஹவுசிங் போர்டு பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்று விசாரணை நடத்தியதாகவும், தப்பியோடி வழுக்கி விழுந்த 3 பேர் தவிர எஞ்சிய இருவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் கூறினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments