அருணாசல பிரதேச முதலமைச்சராக தொடர்ந்து 3-வது முறையாக பெமா காண்டு பதவியேற்பு

0 368

அருணாசல பிரதேச மாநில முதலமைச்சராக பெமா காண்டு தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பதவியேற்றார்.

ஆளுநர் கே.டி. பர்நாயக் பதவிப் பிரமாணமும் ரகசியகாப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.

துணை முதலமைச்சராக சௌனா மெய்ன் இரண்டாவது முறையாகப் பதவியேற்றார்.

முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் பத்து எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

தலைநகர் இடாநகரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா, கிரண் ரிஜிஜு, அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் 46 இடங்களில் பா.ஜ.க வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments