சிவகங்கையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்... அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

0 376

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நவரத்தின நகரைச் சேர்ந்த குமார், மனைவி ஆனந்தவள்ளியுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது கல்லூரி சாலை - செக்காலை வீதி சந்திப்பில் பின்னால் வந்த கார் மோதியது.

இதில், படுகாயமடைந்த ஆனந்தவள்ளி, மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூளைச்சாவு அடைந்ததாகக் கூறப்படுகிறது.

குடும்பத்தினரின் அனுமதியுடன் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments