கன்னியாகுமரியில் விசாரணைக்கு சென்ற உதவி ஆய்வாளரை மண்வெட்டியால் தாக்கிய நபர் கைது

0 491

கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி அருகே மாற்றுத்திறனாளி பெண் தாக்கப்படுவதாக வந்த தகவல் குறித்து விசாரிக்க சென்ற உதவி ஆய்வாளரை மண்வெட்டியால் தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

கருங்காலிவிளையை சேர்ந்த மாற்றுத் திறனாளியான புஷ்பலதா என்பவர், பக்கத்து வீட்டில் வசிக்கும் மகேந்திர கொடிகலன் தன்னை தாக்குவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அங்கு சென்ற உதவி ஆய்வாளர் வில்சனை, மகேந்திர கொடிகலன் மண்வெட்டியால் தாக்கியதில் அவருக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments