போதை மருந்து, சட்ட விரோத துப்பாக்கி வாங்கிய வழக்கு... அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் குற்றவாளி எனத் தீர்ப்பு

0 372

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹன்ட்டர் பைடன் வழக்கு ஒன்றில் அமெரிக்க நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.

டெலாவரின் வில்மிங்டன் நீதிமன்றத்தில் 54 வயது ஹன்ட்டர் பைடன் மீது சட்டவிரோத துப்பாக்கி வாங்கியது, போதை மருந்து பயன்படுத்தியது உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுகள் மீது விசாரணை முடிந்து 12 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது.

3 குற்றச்சாட்டுகளிலும் ஹன்ட்டர் பைடன் குற்றவாளி என நீதிபதிகள் தீர்ப்பளித்து, தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றனர். அமெரிக்க சட்டப்படி ஹன்ட்டர் பைடனுக்கு 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments