நண்பருடன் மதுக்குடிக்க சென்ற ராணுவ வீரர் குத்திக் கொலை.. 40 நாள் விடுமுறையில் வந்தவருக்கு நேர்ந்த விபரீதம்..!

0 435

இமாச்சலப் பிரதேசத்தில் எல்லைப் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றும் கனகசபாபதி என்பவர், 40 நாள் விடுமுறையில் சொந்த ஊரான காஞ்சிபுரம் மாவட்டம் ஏரிவாய் கிராமத்துக்கு வந்த போது, டாஸ்மாக் மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

நண்பருடன் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிய போது, வாலாஜா அருகே ஊத்துக்காடு டாஸ்மாக் கடையில் மது குடிக்க கனகசபாபதி சென்றதாகவும், அங்கு முன்பின் அறிமுகமில்லாத ஒருவருடன் நடந்த மோதலில் கத்தியால் குத்தப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கனகசபாபதியை கொன்றவரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments