குழந்தைக்காக கட்டப்பட்ட தூளி புடவையில் சிக்கி 12 வயது சிறுவன் பலி

0 412

சென்னை கொருக்குப்பேட்டையில் 6 மாத குழந்தைக்காக புடவையில் கட்டப்பட்டிருந்த தூளியில் விளையாடிய போது கழுத்து இறுகி 12 வயது சிறுவன் உயிரிழந்தான்.

ரங்கநாதபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வரும் அச்சிறுவன் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தனியாக தொட்டிலில் விளையாடிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

வெளியில் அமர்ந்திருந்த பெற்றோர் உள்ளே சென்று பார்த்த போது தூளிப் புடவை கழுத்தில் சுற்றிய நிலையில் வாயில் நுரை தள்ளியபடி கிடந்த சிறுவனை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக பெற்றோர் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments