பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மூன்றாம் பாலினத்தவர்கள்

0 482

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில் மூன்றாம் பாலினத்தவர் 50 பேர் பங்கேற்றதாக மத்திய அரசு கூறியுள்ளது.

பதவி ஏற்பு விழா அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்பியதால் மூன்றாம் பாலினத்தவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் வீரேந்திர குமார் கூறினார்.

பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவது இதுவே முதன்முறை என்றும், பிரதமர் விடுத்த அழைப்பை ஏற்று 50 பேரும் விழாவில் கலந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments