விருதுநகரில் அரசுப் பேருந்து பாலத் தடுப்பில் மோதி சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயம்

0 306

விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகர் பகுதியில் ஓட்டுநரின் தூக்கக்கலக்கத்தால் அரசுப் பேருந்து பாலத்தின் தடுப்பில் மோதிக் கவிழ்ந்ததில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கோவையிலிருந்து கோவில்பட்டி நோக்கிச் சென்ற அந்தப் பேருந்தை முருகபூபதி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

அதிகாலை 5.10 மணியளவில் நேர்ந்த இந்த விபத்தில், பேருந்தின் நான்கு சக்கரங்களுமே உடைந்து சிதறின. சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள், பேருந்துக்குள் சிக்கி கூச்சலிட்ட பயணிகளை ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வருவதற்குள் அவ்வழியாகச் சென்ற வாகனங்களில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments