சென்னையில் பிரபல சீனிவாசா உணவகத்தில் சாப்பாட்டில் கம்பளி பூச்சி... வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்த வாடிக்கையாளர்

0 820

சென்னை மாத்தூரில் இயங்கிவரும் பெரம்பூர் ஸ்ரீனிவாசா ஓட்டலில் உணவுடன் பரிமாறப்பட்ட சாம்பாரில் கம்பளிப் பூச்சி ஒன்று இறந்து கிடந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து அங்கு சென்ற உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அவரது இலையில் இருந்த உணவை சேகரித்துக்கொண்டு ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.

இதுகுறித்து உணவக மேலாளரிடம் கேட்டபோது, வேலூரில் இருந்துவரும் கத்திரிக்காயின் நடுப்பகுதி என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments