தமிழ்நாட்டில் தொகுதிகளை பெற முடியாவிட்டாலும் பா.ஜ.க. வாக்கு சதவிகிதம் அதிகரிப்பு: பிரதமர் மோடி

0 718

தமிழ்நாட்டில் தொகுதிகளை பெற முடியாவிட்டாலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்கு சதவிகிதம் கணிசமாக அதிகரித்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு உரையாற்றிய பிரதமர், கர்நாடகா, தெலங்கானாவில் அண்மையில் காங்கிரஸ் அரசு அமைந்த போதிலும், அக்கட்சி மீது மக்கள் நம்பிக்கையை இழந்து பா.ஜ.க.வை ஆதரித்துள்ளதாக தெரிவித்தார்.

ஆந்திராவில் தங்கள் கூட்டணி வரலாற்று வெற்றி பெற்றுள்ள நிலையில், கேரளாவிலும் பா.ஜ.க.வின் வாக்கு சதவிகிதம் அதிகரித்திருப்பது, பா.ஜ.க.வை தென்னிந்தியா வரவேற்பதை காட்டுவதாக பிரதமர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments