3-வது முறை பிரதமராக முறைப்படி தேர்வாகிறார் மோடி... ஆதரவு எம்.பி.க்கள் பட்டியலுடன் குடியரசு தலைவரை சந்திக்கிறார்

0 727

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நடைபெறுகிறது.  பாஜக, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உட்பட கூட்டணியில் உள்ள கட்சிகளின் எம்.பி.க்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

இதில், பிரதமர் நரேந்திர மோடி, தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக் குழு தலைவராக முறைப்படி ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளார்.

இதனைத் தொடர்ந்து  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்கும் மோடி, ஆதரவு எம்.பி.க்கள் பட்டியலை அவரிடம் வழங்கி, ஆட்சி அமைக்க உரிமை கோருவார். இதையடுத்து, வரும் 9-ம் தேதி  பாஜக கூட்டணி அரசு பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க இலங்கை, வங்கதேசம், நேபாளம், மொரீஷியஸ், பூடான் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments