ஆளுநராக இருப்பதா இல்லையா என்பது தமது விருப்பம் என்றும், அதைப் பற்றி வேறு யாரும் கவலைப்பட வேண்டாம்: தமிழிசை

0 1227

ஆளுநராக இருப்பதா இல்லையா என்பது தமது விருப்பம் என்றும், அதைப் பற்றி வேறு யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

தேர்தல் வாக்குறுதிப்படி சென்னை சாலிகிராமத்தில் தமது மக்கள் தொடர்பு அலுவலகத்தை திறந்து வைத்த பின் பேட்டியளித்த அவர், தம்மை பரட்டை என்று உருவக் கேலி செய்யும் தி.மு.க. இணைய அணியினரை முதலமைச்சர் ஸ்டாலின் அடக்கி வைக்க வேண்டும் என்றார்.

தேர்தல் கூட்டணி என்பது வியூகம் அமைப்பது போன்றது என்று குறிப்பிட்ட தமிழிசை, தாமும் எல். முருகனும் தலைவர்களாக இருந்த போது வியூகம் அமைத்ததாகவும், அண்ணாமலைக்கு அதில் விருப்பம் இல்லாததால் வியூகம் அமைக்கவில்லை என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments