ஸ்டெர்லிங் ஹாலிடேஸ் நிறுவனம் மீது தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் புகார்

0 449

இந்தியா முழுவதும் சொகுசு நட்சத்திர விடுதிகளை நடத்தி வரும் பிரபல ஸ்டெர்லிங் ஹாலிடேஸ் நிறுவனம் மீது தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அளித்த புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிறுவனத்தில் ஆயுட்கால உறுப்பினராக சேர்ந்தால் வருடத்திற்கு 15 நாட்கள் பல்வேறு சொகுசு நட்சத்திர விடுதிகளில் இலவசமாக தங்கிக் கொள்ளலாம் என்று கூறியதன் அடிப்படையில் ஏழரை லட்சம் ரூபாய் பணம் செலுத்தியதாக அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.

ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக எந்த சலுகையும் வழங்காமல் ஏமாற்றியதாக வேல்முருகன்அளித்த புகாரின் அடிப்படையில், ஸ்டெர்லிங் ஹாலிடேஸ் நிறுவனத்தின்இயக்குநர்கள் உள்பட 6 பேர் மீது நம்பிக்கை மோசடி, கூட்டுச்சதி ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments