டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் எம்.பி ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பு

0 605

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்.பி ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்திக்கிறார்.

பங்குச் சந்தையில் பெரும் முறைகேடு நடந்துள்ளது: ராகுல்

"பங்குச் சந்தையில் ரூ. 38 லட்சம் கோடி இழந்த சாமானியர்"

"நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும்"

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பு

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் திட்டமிட்டு முறைகேடு செய்யப்பட்டுள்ளது: ராகுல்

பங்குச் சந்தையில் லாபம் ஈட்டுவதற்காக கருத்துக் கணிப்பை திரித்துள்ளனர் பா.ஜ.க.வினர்: ராகுல்

வாக்கு எண்ணிக்கைக்கு முன் பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறு உள்துறை அமைச்சர் வலியுறுத்தி இருந்தார்: ராகுல்

குறிப்பிட்ட 5 கோடி குடும்பத்தினர் பங்குச் சந்தையில் குறிப்பிட்ட நேரத்தில் முதலீடு செய்யுமாறு உள்துறை அமைச்சர் அறிவுறுத்தியது ஏன்?: ராகுல்

பங்குச் சந்தை முறைகேடு தொடர்பாக செபி விசாரணை மேற்கொள்ள வேண்டும்: ராகுல்

பங்குச் சந்தையில் முறைகேடு செய்யப்பட்டதால் சாமானிய மக்கள் ரூ. 38 லட்சம் கோடி இழந்துள்ளனர்: ராகுல்

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பை பயன்படுத்தி பா.ஜ.க.வினர் லாபம் சம்பாதித்துள்ளனர்: ராகுல்

பா.ஜ.க.வின் கருத்துத் திணிப்பால் பங்குகள் விலை கணிசமாக உயர்ந்தன: ராகுல்

விலை உயர்ந்ததை பயன்படுத்தி பா.ஜ.க.வினர் அதிக லாபத்தை ஈட்டினர்: ராகுல்

பிரதமர், உள்துறை அமைச்சரிடம் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும்: ராகுல்

தேர்தல் கருத்துகணிப்புக்கு முன் மே 30, 31-ஆம் தேதிகளில் பங்குச் சந்தையில் முதலீடு குவிக்கப்பட்டது: ராகுல்

தேர்தல் முடிவுக்குப் பின் பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டதால் சாதாரண முதலீட்டாளர்கள் இழப்பை சந்தித்தனர்: ராகுல்

செபியின் விசாரணைக்கு உள்ளான ஊடக நிறுவனத்தில் அமித் ஷா பங்குச் சந்தை பற்றி பேட்டியளித்தது ஏன்?: ராகுல்

ஜூன் 4-இல் பங்குச் சந்தையில் பெரும் ஏற்றம் ஏற்படும் என பிரதமரும் உள்துறை அமைச்சரும் அறிவுறுத்தியது முறைகேடானது: ராகுல்

குறிப்பிட்ட சில குடும்பத்தினர் மட்டும் பணம் ஈட்ட பிரதமரும் உள்துறை அமைச்சரும் உதவியுள்ளனர்: ராகுல்

தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகளை நடத்தியவர்கள் மீதும் விசாரணை நடத்த வேண்டும்: ராகுல்

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்து லாபம் ஈட்டியுள்ளனர்: ராகுல்

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் லாபமாக கொண்டு சென்றது இந்தியாவின் சில்லறை முதலீட்டாளர்களின் பணம் தான்: ராகுல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments