சிவகாசியில் கந்துவட்டி கொடுமையால் தாய்-மகள் தற்கொலைக்கு தூண்டியதாக 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது

0 304

சிவகாசி அருகே கந்துவட்டி கொடுமையால் தாய், மகள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மீனம்பட்டியை சேர்ந்த ஜெயக்குமார், ஞானபிரகாசி தம்பதி கல்வி மற்றும் மருத்துவ செலவுகளுக்காக 4 லட்சம் ரூபாய் வரை வட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

வட்டியை கட்ட முடியாமல் தம்பதி    யினர் தவித்த நிலையில், கடன் கொடுத்த சிலர் ஜெயச்சந்திரன் வீட்டில் இல்லாத நேரத்தில் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ஞானபிரகாசி தனது மகள் ஷர்மிளாவுடன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. ஷர்மிளா எழுதி வைத்திருந்த கடிதத்தின் அடிப்படையில் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments