போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் ஜனசேனா வெற்றி... ஆந்திராவை மறுகட்டமைக்க வேண்டியுள்ளது - பவன் கல்யாண்

0 730

ஆந்திராவில் சட்டசபைக்குப் போட்டியிட்ட 21 இடங்களிலும், மக்களவைக்குப் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி வெற்றி பெற்றுள்ளது.

மங்களகிரியில் கட்சித் தலைமையகத்தில் பேசிய பவன் கல்யாண், நாட்டிலேயே, சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்துக்குப் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றிபெற்ற கட்சி என்ற சாதனையை ஜனசேனா படைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

ஜெகன் மோகன் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸுக்கும் தனக்கும் எந்த தனிப்பட்ட விரோதம் இல்லையென்றும், இது பழிவாங்கும் நேரமும் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments