முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்தி சீட்டு கம்பெனி நடத்தி மோசடி செய்ய முயன்றதாக ராஜ்குமார் என்பவர் கைது

0 554

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் பெயரை பயன்படுத்தி சீட்டு கம்பெனி நடத்தி மோசடியில் ஈடுபட முயன்றதாக ராஜ்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பள்ளப்பட்டி பேருந்து நிலையம் பகுதியில் எம்.ஆர்.வி. என்ற பெயரில் இன்று திறக்கப்பட்ட சீட்டு கம்பெனியில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் பெயர் பயன்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து அதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

போலீசார் அங்கு சென்று ராஜ்குமாரிடம் விசாரித்ததில் அனுமதியின்றி சீட்டுகம்பெனி தொடங்கியதும், வேடசந்தூரிலும் இதேபோன்று ஒரு சீட்டு கம்பெனி நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments