சொத்து பிரச்சனையில் அடித்து நொறுக்கப்பட்ட வீடு... தகராறு தொடர்பாக 17 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

0 398

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே 65 வயது பெண் வசித்து வந்த தகரக்கூரை வேய்ந்த வீட்டை 10 பேருடன் சென்று சுத்தியால் அடித்து உடைத்ததாக உறவுக்கார இளைஞர் கைது செய்யப்பட்டார். காவாளி என்ற கிராமத்தில் நடந்த அச்சம்பவத்தின் போது, வீட்டை உடைக்க எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி பெண்கள் சிலர் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

உடைக்கப்பட்ட இந்த வீட்டின் அருகே சிதிலமடைந்த நிலையில் உள்ள ஓட்டு வீட்டில் 50 ஆண்டு காலமாக ரத்தினசாமி மற்றும் அவரது மனைவி பாப்பம்மாள் வசித்து வந்ததாக தெரிகிறது.

ரத்தினசாமி 3 ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், அவரது அண்ணன் கந்தப்பிள்ளையின் மகன் கண்ணன், வீடு உள்ள நிலம் தமது தந்தையின் பெயரில் இருந்ததாகவும், அண்மையில் தான செட்டில்மெண்ட் மூலம் தனது பெயருக்கு நிலத்தை மாற்றிக் கொடுத்துவிட்டதால் அங்கிருந்து செல்லுமாறு கூறி பாப்பம்மாளுடன் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

தகராறு தொடர்பாக இரு தரப்பிலும் 17 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments