மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் முதலமைச்சர்

0 429

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே அலங்கரித்து வைக்கப்பட்ட உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் நூற்றாண்டு நிறைவு சிறப்பு மலரை வெளியிட்டு, புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.

அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு முன்பாக உள்ள கருணாநிதியின் சிலையின் கீழ் வைக்கப்பட்ட உருவ படத்திற்கு முதலமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் கருணாநிதியின் உருவபடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர், நூற்றாண்டு நிறைவு சிறப்பு மலரையும் வெளியிட்டார்.

திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் சிலையின் கீழ் வைக்கப்பட்ட உருவ படத்திற்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments