கடந்த மாதம் 18ஆம் தேதி காணாமல் போன ஆசிரியர் உடல், சாக்கு மூட்டையில் கண்டெடுப்பு

0 412

கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூரில் கடந்த மாதம் 18ஆம் தேதி காணாமல் போன அறிவியல் ஆசிரியர் விக்டர் என்பவரின் உடல்  சாக்குமூட்டையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

அரசு உதவி பெறும் ஆண்கள் பள்ளியில் பணியாற்றும் விக்டரை காணவில்லை என அவரது தாய் கடந்த 28ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து விக்டருக்கு வந்த செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்த போலீசார் கடைசியாக அவரிடம் பேசிய தட்சிணாமூர்த்தி என்பவரை பிடித்து விசாரித்ததில், விக்டரை கொன்று சாக்குமூட்டையில் கட்டி நெய்வேலி தீயணைப்பு நிலையத்திற்கு பின்புறம் வீசியது தெரியவந்துள்ளது.

21 வயதான தன்னுடைய சகோதரிமுறை கொண்ட பெண்ணுக்கு  மனைவியை பிரிந்த 40 வயது விக்டர்  தொடர்ந்து தொல்லை கொடுத்து  வந்ததால்  கொலை செய்ததாக தட்சிணாமூர்த்தி வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments