542 மக்களவைத் தொகுதிகளில் நாளை வாக்கு எண்ணிக்கை

0 623

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

வாக்கு எண்ணிக்கையை சுமுகமாக நடத்துவது குறித்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனை நடத்தியுள்ளார்.

முன்னணி நிலவரங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் உடனுக்குடன் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வோட்டர் ஹெல்ப்லைன் ஆப் மூலமும் வாக்கு எண்ணிக்கை குறித்த முழுமையான தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும்.

ஆந்திரா மற்றும் ஒடிசா சட்டசபைத் தேர்தல் முடிவுகளும், 26 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளும் நாளை அறிவிக்கப்படுகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments