இடைக்கால ஜாமீன் முடிந்து திகார் சிறைக்கு திரும்பினார் கெஜ்ரிவால்.. காந்தி நினைவிடத்தில் அஞ்சலி, அனுமன் கோயிலில் வழிபாடு

0 417

டெல்லி மதுபான உரிம முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த மாதம் 10ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் காலக்கெடு நிறைவடைந்ததால், பிற்பகலில் திகார் சிறையில் சரணடைந்தார்.

முன்னதாக, காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு, கன்னாட் ப்ளேசில் உள்ள அனுமன் கோயிலில் தனது மனைவி சுனிதாவுடன் கெஜ்ரிவால் வழிபாடு நடத்தினார்.

பின்னர் ஆம் ஆத்மி தொண்டர்களிடையே பேசிய அவர், தேர்தல் பரப்புரைக்காக உச்ச நீதிமன்றம் வழங்கிய 21 நாள் ஜாமீன் முடிந்து சிறைக்கு திரும்புவதாக தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments