கோவையைச் சேர்ந்த 44 வயது பெண் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.. பொதுமக்களை ஏமாற்றி, காவல்துறையினரை மிரட்டியதாகப் புகார்

0 555

கோவையில் பொதுமக்களை பல்வேறு விதங்களில் ஏமாற்றியதுடன், போலீசார் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதாக 44 வயது பெண் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த விஷ்வதர்சினி என்பவர், சில வருடங்களுக்கு முன் நடிகர் விஷால் மற்றும் சிறுமி ஒருவர் குறித்து அவதூறு பரப்பியதாக போக்சோ வழக்கில் சிறைத்தண்டனை பெற்று ஜாமீனில் வந்தவர்.

மேலும் பேஸ்புக் மூலம் பழகி பண மோசடி செய்தது, காவலர்களை தரக்குறைவாக பேசியது என பல்வேறு வழக்குகள் அவர் உள்ளதால்,

கோவை மத்திய சிறையில் இருக்கும் அவர் மீது மாநகர காவல் ஆணையரின் உத்தரவுப்படி குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments