மேய்ச்சலின்போது நாட்டுவெடி வெடித்து வாய்கிழிந்த பசுமாடு.. ரத்தம் சொட்ட சொட்ட நின்றிருந்த தனது மாட்டை பார்த்து கதறி அழுத பெண்

0 390

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ராளகொளத்தூரில் நாட்டுவெடி வெடித்து பசுமாடு வாய்கிழிந்து படுகாயமடைந்துள்ளது.

மஞ்சுளா என்ற பெண்ணுக்குச் சொந்தமான அந்த பசுமாடு அங்குள்ள நிலத்தில் மேய்ந்துகொண்டிருந்தபோது திடீரென வெடிச்சத்தம் கேட்டுள்ளது. வாய் கிழிந்து ரத்தம் கொட்ட நின்றிருந்த தனது மாட்டைப் பார்த்து மஞ்சுளா கதறி அழுதார்.

அப்பகுதியில் வனவிலங்குகளுக்காக, அவுட்டுக்காய் எனப்படும் நாட்டுவெடிகள் வைக்கப்படுவதை கண்காணித்துத் தடுக்க வேண்டும் என ஊர்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments