காற்றில் பறந்த மாஞ்சா நூல் சிக்கி இளைஞரின் கழுத்தில் காயம்

0 251

சென்னையை அடுத்த புழலில் உள்ள மேம்பாலம் ஒன்றில் இருந்து இரு சக்கர வாகனத்தில் இறங்கிக் கொண்டிருந்த தனியார் நிறுவன ஊழியர் திலீப் குமார் என்பவரின் கழுத்தை, அங்கு பறந்து வந்த மாஞ்சா நூல் அறுத்தது.

உடனே அந்த நூலை அவர் பிடித்து விலக்கிய போது, கையிலும் காயம் ஏற்பட்டதை அடுத்து ரெட்டேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தடையை மீறி மாஞ்சா பயன்படுத்தி பட்டம் விட்ட நபரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments