கடனை திருப்பிக் கேட்ட சுய உதவிக்குழு தலைவியை இரும்பு ராடால் தாக்கிக் கொன்றதாக மீனவர் கைது

0 399

சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரில் கடன் தவணையை உரிய நேரத்தில் கட்டுமாறு கேட்ட மகளிர் சுய உதவிக்குழு தலைவியை இரும்பு ராடால் அடித்துக் கொன்றதாக மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

 

அஜித் குமார் என்ற அந்த மீனவர் தமது மனைவி பெயரில் வாங்கிய கடன் தவணை பற்றி கேட்ட காயத்ரியை இரும்பு ராடால் தாக்கியதாகவும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட காயத்ரி சிகிச்சைக்கு பிறகு அஜித் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று எழுதி கொடுத்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில் 2 நாட்களுக்குப் பின் தலைவலி ஏற்பட்டு காயத்ரி மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments