திருவள்ளூரில் பெயின்ட் தொழிற்சாலையில் நிகழ்ந்த தீவிபத்தில் 3 பேர் உயிரிழப்பு

0 179

திருவள்ளூர் அடுத்த காக்களூர் சிப்காட் தொழில்பேட்டையில் உள்ள பெயின்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர் உள்பட 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

அங்கு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. பணியில் இருந்த தொழிலாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.


தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட ஷோபனா என்ற பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீயில் சிக்கி சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments