அசைவ ஓட்டலில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல் என குற்றச்சாட்டு

0 340

மயிலாடுதுறையில் நகராட்சி வணிக வளாகத்தில் ஆக்கிரமித்து நடத்தப்படும் பாய் வீட்டு கல்யாண பிரியாணி என்ற உணவகத்தில் ஆய்வு நடத்தச் சென்ற சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 2 பேர் தாக்கப்பட்டதாகக் கூறி நகராட்சி ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆய்வின் போது கொக்கியில் மாட்டியிருந்த பிளாஸ்டிக் பைகளை எடுக்க சுகாதார ஆய்வாளர் பிருந்தா முற்பட்டதாகவும், ஓட்டல் ஊழியர்கள் அதை பிடுங்கிய போது கொக்கி தமது மோதிரத்தில் மாட்டி ஆய்வாளர் பிருந்தா அலறியதாகவும் கூறப்படுகிறது.

இதை தட்டிக் கேட்ட நகரமைப்பு பிரிவு உதவியாளர் முருகராஜையும் ஓட்டல் ஊழியர்கள் தாக்கியதாகவும் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது.

இதையடுத்து, தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் ஓட்டல் ஊழியர்கள் சமரசம் பேச நகராட்சி அலுவலகத்துக்கு வந்த போது, இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments