திருமணத்திற்காக நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது

0 295

யூ-டியூப்பை பார்த்து திருடுவது எப்படி என்று தெரிந்து கொண்டு தனது திருமணத்துக்காக செயின் பறிப்பில் ஈடுபட்டதாக கூறப்படும் சிவில் இன்ஜினியர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

தாம்பரத்தை அடுத்த சேலையூரை சில நாட்களுக்கு முன் இருசக்கர வாகனத்தில் வந்த நபர், 2 பெண்களிடம் தங்க சங்கலியை பறித்துச் சென்றார்.

சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் நகை பறிப்பில் ஈடுபட்ட மடிப்பாக்கத்தை சேர்ந்த அருணாச்சலம் என்ற இளைஞரை கைது செய்த போலீசார், வரும் 10-ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த அருணாச்சலம், ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட 15 லட்சம் ரூபாய் நஷ்டத்தை ஈடுகட்ட நகைப் பறிப்பில் ஈடுபட்டதாகதாக தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments