கோவில் பேனர் கிழிக்கப்பட்டதால் உண்டான முன்விரோதம் ... காரை ஒட்டிச் சென்று அச்சுறுத்திய வி.சி.க பிரமுகர்

0 220

திருவண்ணாமலை மாவட்டம் அரசம்பட்டு கிராமத்தில் கோவில் திருவிழாவில் பேனர் கிழித்தது தொடர்பான முன்விரோத தகராறில் விசிக பிரமுகர் வடிவேலு என்பவரின் கார் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டன.

தனது பேனர் கிழிக்கப்பட்ட ஆத்திரத்தில் வடிவேல் மதுபோதையில் தனது காரை வேகமாக ஓட்டி, தெருவில் இருந்த தென்னை மரத்திலும் படுக்கை கல் மீதும் மோதிச் சென்றதாகக் கூறப்படும் நிலையில், ஆத்திரமடைந்த சிலர் அவரது கார் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.

இருதரப்புக்கும் மோதல் உருவான நிலையில், கைக்குழந்தையுடன்இருந்த சந்தியா என்ற பெண், வடிவேல் தனது ஆடைகளைக் கிழித்து, தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகக் குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டார். 

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், வடிவேலு உட்பட இரு தரப்பிலும் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments