அரசியலில் இருந்து அப்புறப்படுத்த எதிரிகள் யாகம் - டி.கே.சிவகுமார்

0 254

தன்னையும் முதலமைச்சர் சித்தராமையாவையும் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த, பில்லி சூனியம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் அரசியல் எதிரிகள் ஈடுபட்டுள்ளதாக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.

கேரளாவில் உள்ள ராஜராஜேஸ்வரி கோவில் அருகே, அகோரிகள் மற்றும் தந்திரிகள் மூலம் யாகங்கள் செய்து, ஆடுகள், எருமைகள், பன்றிகளைப் பலியிட்டு பூஜை செய்யப்பட்டதாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

இந்த பூஜைகளை செய்தது யார் என்று தமக்குத் தெரியும் என்றும், அவர்களின் நடவடிக்கை குறித்து கவலைப்படப்போவதில்லை என்றும், தான் வணங்கும் சக்தி தன்னைக் காப்பாற்றும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments