திண்டுக்கல் கூட்டுறவு சங்க செயலாளரிடம் மாமூல் கேட்டு மிரட்டிய நபர் கைது

0 200

குஜிலியம்பாறை அருகே, மாற்றுத்திறனாளி பெண் அதிகாரியிடம் மாமுல் கேட்டு மிரட்டிய புகாரில் அருள் முருகன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மாற்றுத்திறனாளியான விமலா, லந்தகோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் பொறுப்பு செயலாளராக உள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி எனக் கூறப்படும் அருள் முருகன் மாமூல் கேட்டு தாம் தர மறுத்ததால், தமது உடல் குறைபாட்டை சுட்டிக்காட்டி ஆபாசமாகத் திட்டியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக விமலா அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments