விவேகானந்தர் பாறையில் தியானத்தை துவக்கினார் பிரதமர் மோடி.. ஜூன் 1-ஆம் தேதி வரை தியானம் செய்ய இருப்பதாக தகவல்..!

0 508

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி தியானம் துவங்கியுள்ளார்.

ஜூன் 1-ஆம் தேதி வரை அவர் தியானம் செய்வார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன் 2014-ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரம் முடிந்து பிரதாப்கரிலும், 2019-இல் கேதர்நாத்திலும் பிரதமர் தியானம் மேற்கொண்டார்.

கன்னியாகுமரியில் புகழ்பெற்ற பகவதி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்திய பின் படகு மூலம் விவேகானந்தர் பாறைக்கு பிரதமர் சென்றார்.

பிரதமர் தியானம் மேற்கொள்வதை முன்னிட்டு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய கடலோர காவல்படை மற்றும் கடற்படையும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments