தூக்கத்தில் இருந்த போது எழுப்பியதால் திட்டிய நபர் கொலை.. பீர் பாட்டிலால் அடித்துக் கொன்ற கொடூரம்..!

0 404

தூக்கத்தில் இருந்த போது எழுப்பியதால் ஆத்திரத்தில் திட்டிய நபரை பீர் பாட்டிலால் அடித்துக் கொன்ற கூலி தொழிலாளியை சென்னை கோயம்பேடு போலீசார் தேடி வருகின்றனர்.

கோயம்பேடு மார்கெட்டில் தனது சகோதரரின் டிபன் கடையை கவனித்து வந்த சேகர் என்பவர் வேலை முடிந்து மது அருந்தி விட்டு தூக்கத்தில் இருந்த போது, அங்கு போதையில் வந்த சக்தி என்பவர் சேகரை தட்டி எழுப்பியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் பீர்பாட்டிலால் சக்தி தாக்கியதில் பலத்த காயமடைந்த சேகர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோயம்பேடு மார்கெட் பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதே இது போன்ற பிரச்சனைக்கு காரணம் என்று சக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments