ஜிம் பயிற்சியாளர் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கு - குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியல்

0 373

புதுச்சேரியில் ஜிம் பயிற்சியாளர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த ஜிம் பயிற்சியாளரான மணிகண்டன் என்ற விக்கி என்பவர் தனது வீட்டின் அருகே நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 4 பேருடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் அந்த கும்பல் தலையில் கல்லால் அடித்ததில் படுகாயமடைந்த மணிகண்டன் உயிரிழந்தார். இந்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளை மணிகண்டனின் உறவினர்கள் அடித்து நொறுக்கினர்.

குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி ரயில் நிலையம் செல்லும் சாலை அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments