சென்னை அயனாவரத்தில் மருந்துக்கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த போலி போலீஸ்க்கு வலை

0 327

சென்னை அயனாவரத்தில் போலீஸ் எனக் கூறி, போதைக்காக மாத்திரைகளை விற்பதாக மருந்தக உரிமையாளரை மிரட்டிப் பணம் பறித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். விநாயகா பார்மசி என்ற அந்தக் கடைக்கு வந்த ஒரு நபர் உரிமையாளர் பிரபாகரனிடம் இருமல் மருந்து கேட்டு வாங்கியுள்ளார்.

அவருடன் வந்த மற்றொரு நபர், தன்னைப் போலீஸ் எனக் கூறி, "பில் இல்லாமல் போதைக்காக மருந்துகள் விற்பனை செய்கிறாயா? எனக் கேட்டு, கல்லாப்பெட்டியிலிருந்த 7 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து பிரபாகரனையும் மருந்து வாங்கிய நபரையும் இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று பிரபாகரனை மிரட்டி, 60  ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொண்டு தப்பியோடியுள்ளனர். மருந்து வாங்க வந்த நபரும் கொள்ளை கும்பலோடு சேர்ந்தவனா என விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments