ஒடிசாவில் இருந்து அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த 4 பேர் கைது

0 367

ஒடிசாவில் இருந்து கடலூர் மாவட்டம் வேப்பூருக்கு கஞ்சா கடத்திவந்ததாக தபால்காரர் உள்பட 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 13 கிலோ கஞ்சா, 4 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

வேப்பூர் பேருந்து நிலையத்தில் திருச்சி மார்க்கத்தில் சென்ற அரசு பேருந்துகளில் போலீசார் நடத்திய சோதனையில் இந்த கடத்தல் கும்பல் சிக்கியுள்ளது. இவ்வழக்கில் மூளையாக செயல்பட்ட வெங்கனூர் கிராம தபால்காரர் சக்திவேல், தனது சென்னை நண்பர் மூலம் கஞ்சா கிடைத்தாக கூறியது குறித்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments